தலைமைத் தளபதியை தெரிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை!

முப்படை தலைமைத் தளபதியை தெரிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமைத் தளபதி நியமிக்கும் வரை முப்படைத் தளபதிகள் தனித்தனியாக இயங்கும் பழைய முறையே நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ சீர்த்திருத்தங்கள் தொடரவும், முப்படைகள் இணைந்து செல்படவும் புதிய முப்படைத் தலைமைத் தளபதியை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

பிபின் ராவத்தின் மறைவுக்குப் பிறகு எம்.எம்.நரவனே மிக மூத்த இராணுவ அதிகாரியாக உள்ளமையால் அவர் குறித்த பதவியில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *