டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட விமான விபத்தில் இசையமைப்பாளர் ஹெர்னாண்டஸ் உட்பட ஒன்பது பேர் உயிரிழப்பு!

டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட விமான விபத்தில், புவேர்ட்டோ ரிக்கன் இசையமைப்பாளர் ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸ் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில், அவசரமாக தரையிறங்கும் போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தனியார் விமான நிறுவனமான ஹெலிடோசா ஏவியேஷன் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் இறந்ததாகவும் ஆறு பேர் வெளிநாட்டினர் மற்றும் ஒருவர் டொமினிகன் எனவும் குறிப்பிட்டுள்ளது, மேலும், ஆறு பயணிகளின் தேசியம் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே, அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தையும் இருப்பதாக அவரது விளம்பரதாரர் கூறுகிறார்.

இதேபோல, ஹெர்னாண்டஸின் பங்குதாரர் மற்றும் அவரது மகனும் இறந்தவர்களில் அடங்குவதாகவும், இறந்தவர்களில் இருவர் நான்கு மற்றும் 13 வயதுடைய சிறார்கள் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸின் இழப்பு, சுப்பர் ஸ்டார் ஜே பால்வின் மற்றும் புகழ்பெற்ற பாப் பாடகர் ரிக்கார்டோ மொன்டனர் உட்பட பல போர்ட்டோ ரிக்கன் மற்றும் பிற லத்தீன் கலைஞர்களிடமிருந்து இரங்கல் மற்றும் நினைவுச் செய்திகளைத் தூண்டியது.

38 வயதான அவர் கரீபியனில் பிரபலமான ஒரு இசை வகையான ரெக்கேட்டனில் நன்கு அறியப்பட்டவர். இவரை அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.

புவேர்ட்டோ ரிக்கன் இசை தயாரிப்பாளர் ஜோஸ் ஏ. ஹெர்னாண்டஸ், ‘ஃப்ளோ லா மூவி’ என்று நன்கு அறியப்பட்டவர்.

ஹெர்னாண்டஸ் முக்கியமாக அவரது ஹிட் பாடலான ‘தே போட்டே’க்காக அதிகம் பேசப்பட்டவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *