யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில், இன்று காலை அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
இதன்போது, கடலட்டை பண்ணையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று பதிவானது.
அங்கு நின்ற பனை மரத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுதான் ‘பல்மேறா’ என தெரிவித்த போது சீன தூதுவர் பனைமரம் தொடர்பில் வினவினார்.
இதில் ரொடி (கள்) கிடைக்கும். அற்ககோல் என சைகை மூலம் காண்பித்து இது உடம்புக்கு கேடு விளைவிக்காது என விளங்கபடுத்தியபோது தூதுவர் அதற்கு ‘ஹா ஹா’ என சிரித்து தலையசைத்த சம்பவம் இடம்பெற்றது.

இரசாயன உரத்தால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய விசேட செயலணி!