இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அனைவரும் நேற்றைய தினம் (15) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14, 698 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 395 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 546,498 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 576,966 அதிகரித்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.