
அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புஷ்பா படத்தில்
இடம்பெறும் சமந்தாவின் கவர்ச்சிப் பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த ஒரு பாடலில் நடித்தமைக்கு மட்டும் சமந்தா சுமார் 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
தெலுங்கில் வெளியான இந்தப் பாடல் தமிழிலும் ‘ஓ சொல்றியா மாமா.. ஓஓ சொல்றியா மாமா’ என்கிற வரிகளைக் கொண்டு வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், ஆண்களை தரக்குறைவாக சித்தரித்து எழுதப்பட்டதாக கூறி அதனை தடைசெய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கபிலன் எழுதியுள்ள இந்தப் பாடலை தமிழில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்.
மேலும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார்.