யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிரான மனு – இன்றும் விசாரணை!

கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளன.

குறித்த மனு மீதான விசாரணைகள் நேற்றைய தினம்,  ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இடம்பெற்றன.

இந்த நிலையிலேயே மேலுதிக விசாரணைகள் இன்றும் தொடரவுள்ளன.

அதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பீ தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *