இரவு வயல் காவல் கடமைக்கு சென்ற விவசாயிகள் மீது யானை தாக்குதல்!

முல்லைத்தீவில் வயல் காவல் கடமைகளுக்கு சென்ற இரு விவசாயிகள் மீது காட்டு யானை, நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதன்போது காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

நேற்று முல்லைத்தீவு ஆண்டான்குளம் , ஆலங்கடவை பகுதியிலுள்ள தமது விவசாய வயல்களில் இரவு காவல் கடமைகளை மேற்கொள்வதற்காக இருவர் சென்றனர் . நேற்று இரவு வயல்களுக்குள் திடீரென்று உள்நுழைந்த காட்டு யானைகள் வயல் நிலங்களை சேதப்படுத்தியதுடன் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது .

இதில் காயமடைந்த 38 மற்றும் 44 வயதுடைய இரு விவசாயிகள் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

தமது வயல் நிலங்களுக்கு பாதுகாப்பு மின்சார வேலிகள் நீண்டகாலமாக அமைக்கப்படவில்லை இதனால் காட்டு யானைகள் தமது வயல் நிலங்களுக்குள் பிரவேசிக்கின்றது இரவு காவல் கடமைகளுக்கு செல்லும் விவசாயிகள் பலர் மீது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதுடன் இரவில் அச்சமடைந்த நிலையில் தமது இரவு காவல் கடமைகளை மேற்கொண்டு வருகின்றோம் .

எமது உயிர்களைப் பாதுகாப்பதற்கு இங்குள்ள அதிகாரிகள் . மக்கள் பிரதிநிதிகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேலும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *