ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளன நோயாளர் இலங்கையிலிருந்து வெளியேறினார் – சுகாதார அமைச்சு

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சில பி.சி.ஆர் மாதிரிகள், மேலதிக பரிசோதனைக்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் குறித்த ஒமைக்ரோன் நோயாளர் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஆராய்ந்தபோது, அவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தங்களிடம் தகவல் உள்ளதாக தெரிவித்த அவர், எனினும் அவர் எவ்வாறு வெளியேறினார் என்பது குறித்து தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *