யாழ். சங்கானையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை தொட்டிலடி சந்தி பகுதியில் இன்று மதியம் 12.30 மணியளவில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 320 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சித்தங்கேணி மதுவரி நிலைய உத்தியோகத்தர்களால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நபர் முச்சக்கரவண்டியில் கஞ்சாவினை கடத்திச் சென்றபோதேஇவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவாள்ளதாக சித்தங்கேணி மதுவரி நிலையத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *