அம்பாறையில் பிள்ளையார் சிலை உடைத்து சேதம்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில், நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன, பிள்ளையார் சிலை ஒன்றை அமைத்ததையடுத்து அதனை அந்த பிரதான வீதி ஊடாக பிரயாணிக்கும் மக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில்ஈ நேற்று இரவு குறித்த பிள்ளையர் சிலையின் கை, தும்பிக்கை போன்றவற்றை இனந்தெரியாத சந்தேகநபர்கள், உடைத்து சேதமாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தான் பல்கலைக்கழக மாணவர்கள் பகுதிநேர வேலையை விரும்புவதில்லை! ஆறு.திருமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *