தப்பிக்க முயன்ற ஓட்டுனரை தொங்கி பிடித்த போலீசார்…!

மோட்டார் சைக்கிளில் தொங்கிய நிலையில் சென்று சந்தேக நபரை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்துள்ளார்.புறக்கோட்டை பிரதான வீதியில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாகனம் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் வினவிய போது அதன் உரிமையாளர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தருடன் வீதியில் இழுத்துக்கொண்டு சாரதி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். எனினும், சுமார் எழுபது மீற்றர் தூரத்திற்கு பின் மோட்டார் சைக்கிள் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதி கவிழ்ந்தது.

Advertisement

சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *