வவுனியா பேராறு நீர்த்தேக்கம் நீர்வழங்கல் அமைச்சரினால் திறந்து வைப்பு!

வவுனியா நீர் வழங்கல் திட்டத்திற்கான குடிநீர் வழங்கலுக்காக சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் 1400 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பபெற்ற பேராறு நீர்த்தேக்கத்தினை நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது நீர்த்தேக்கத்தினை பார்வையிட்டதுடன் இவ் நீர்த்தேக்கத்தின் ஊடாக குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் தொடர்பாகவும் பார்வையிட்டிருந்தார்.

இந்நிகழ்வில் வன்னி  உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், கு.திலீபன் மற்றும் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் நீர்த்தேக்கமானது 3.85 எம்சிஎம் நீர்க்கொள்ளளவை கொண்டதுடன், இவ் நீர்த்தேக்கம் மூலமாக 23500 பயனாளிகள் பயனடைவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *