நெடுங்கேணி துப்பாக்கி சூடு: பிரதான சந்தேகநபர் கைது!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் பலியாகிய சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 15 ஆம் திகதி காலை 11.30 மணியளவில் வவுனியா – நெடுங்கேணி – சேனைப்பிலவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த ஒருவர், அவர் மீது நாட்டுத்துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், குறித்த குற்றச்செயலை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இரண்டு நாட்களின் பின்னர் இன்று கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் அந்தப்பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் மறைந்திருந்த நிலையில், நெடுங்கேணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.

அவரை கைதுசெய்ய முயற்சித்தபோது அவர் நஞ்சருந்தியுள்ளார். எனினும் பொலிசாரால் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை, குறித்த நபருக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவரும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் புலிகளை போல் செயற்படுகிறது! மருத்துவர் ருக்சான் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *