கொட்டகலையில் சாரதி பயிற்றுவிப்பு பாடசாலை ஒன்றினால் முச்சக்கர வண்டி ஒன்றுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கார் ஒன்று குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு ஆண்கள் படுகாயமடைந்த நிலையில், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையில் இருந்து கொட்டகலை வரை பயிற்சி மேற்கொண்ட முச்சக்கரவண்டி, கொழும்பு கடுவலையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரில் மோதுண்ட முச்சக்கர வண்டி பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது.
இந்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கும் காரில் பயணித்த பெண் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் திம்புள பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம்! வாசுதேவ