சாரதி பயிற்றுவிப்பு பாடசாலையால் முச்சக்கரவண்டி ஒன்றுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, கார் ஒன்று குறித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு ஆண்கள் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையில் இருந்து கொட்டகலை வரை பயிற்சிக்காகப் பயன்படுத்திய முச்சக்கரவண்டி , கொழும்பு கடுவலையில் இருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரில் மோதுண்ட முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது.
விபத்து தொடர்பில் திம்புள பத்தனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.