பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாப பலி….!

தமிழகத்தின் பள்ளி ஒன்றில் உள்ள கழிப்பறையின் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் உள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் மாணவர்களுக்கு இடைவேளை விடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நேரத்தில் மாணவர்கள் கழிப்பறைக்கு சென்றுள்ளனர்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக கழிப்பறையின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் எட்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஸ்வரஞ்சன் ஆகிய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.இந்த சம்பவத்தால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் கோவத்தில் உள்ளனர். இந்த விபத்து குறித்து சில மாணவர்கள் கூறியதாவது, மாணவர்கள் சிலர் சுவரை பலமாக எட்டி உதைத்தனர். அதில் தான் சுவர் உடைந்தது என்று கூறியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக பொலிஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *