முல்லைத்தீவில் காணாமல் போன சிறுமி – பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்?

முல்லைத்தீவில் காணாமல் போன 13 வயதான சிறுமி ஒருவர், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி கடந்த 15 ஆம் திகதி முதல் காணாமல்போய் இருந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த சிறுமியின் சடலம் மூங்கிலாறு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

நீதி மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைகள் இடம் பெற்ற நிலையில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.

குறித்த பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *