நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுடன் மேலும் பலர் அடையாளங்காணப்படலாம் என எச்சரிக்கை!

நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுடன் மேலும் பலர் அடையாளங்காணப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்ஜித் படுவன்துடாவ இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இந்த பிறழ்வு மிகவும் வேகமாக பரவக்கூடியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை நாட்டில் நால்வர் ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் Omicron தொற்றாளர்கள் நாட்டில் இருக்கக்கூடும் என்பதை இதனூடாக அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் ஒமிக்ரோன் வைரசை எதிர்கொள்ளும் திறன் 75 வீதத்திற்கும் அதிகமாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக பூஸ்டர் தடுப்பூசிகளை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *