திருமலையில் புதையல் கடத்த முயன்ற இருவர்; மறைந்திருந்து பிடித்த இராணுவ புலனாய்வுப் பிரிவு

கந்தளாய் பகுதியில் ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான புதையல் பொருளொன்றினை கடத்த முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான புதையல் பொருளொன்றினை கடத்த முற்பட்ட இருவரை நேற்றிரவு (18) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கந்தளாய் மற்றும் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடைய இருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் புதையலில் பெறப்பட்ட பழங்கால பொருளொன்றினை திருகோணமலை பகுதியிலிருந்து கொழும்புக்கு கடத்துவதற்கு முயன்ற நிலையிலே, மறைந்திருந்து சுற்றிவளைப்பு மேற்கொண்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் புதையல் பொருளுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் பொருள் தொடர்பான தொல் பொருள் தொடர்பான அறிக்கைகளை பெறவுள்ளதோடு,
சந்தேக நபர்கள் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *