பண்டிகைக் காலங்களில் நாடு முடக்கப்படுமா? – சுகாதார அமைச்சர் பதில்

<!–

பண்டிகைக் காலங்களில் நாடு முடக்கப்படுமா? – சுகாதார அமைச்சர் பதில் – Athavan News

நத்தார் மற்றும் புதுவருட தினத்தை முன்னிட்டு பண்டிகைக் காலத்தில் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய தேவை இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் நோயாளர்களில் வெளிநாட்டுப் பிரஜையைத் தவிர ஏனைய இலங்கையர்கள் குணமடைந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டுப் பிரஜை சென்ற இடங்கள் தொடர்பான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் நாட்டை மீண்டும் முடக்கிவிட வேண்டிய தேவை இல்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *