பாகிஸ்தானின் வங்கியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் உள்ள வங்கி ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கழிவுநீர் வடிகாலில் இருந்து வந்த வாயு கசிவு காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படும் இந்த குண்டு வெடிப்பில் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

இடிபாடுகளில் பலர் புதையுண்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஹபீப் வங்கி கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வெடித்து சிதறியதையும், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதையும், ஆவணங்கள் தெரு முழுவதும் சிதறிக் கிடப்பதையும் காணொளி காட்சிகள் காட்டுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *