இந்திய அணியின் உப தலைவராக கே.எல்.ராகுல்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் உபதலைவராக கே.எல்.ராகுல் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் உபதலைவர் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவரது இடத்திற்கு கே.எல்.ராகுல் பெயரிப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப் பயணத்திற்கு முன்னர் இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கைகளின் போது ரோஹித் சர்மாவுக்கு உபாதை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளதோடு முதலாவது போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *