சர்ச்சைகளுக்கு மத்தியில் ஹொங்கொங்கில் சட்டப் பேரவைத் தேர்தல்!

ஹொங்கொங்கில் தேர்தல் மாற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் திணிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அம்மக்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

இன்று இடம்பெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் – தேசபக்தர்கள் என அரசாங்கத்தால் கருதப்படும் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இது நகரின் ஜனநாயகக் குரலை பலவீனப்படுத்தியுள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அரசாங்கத் தலைவர்கள் வாக்கெடுப்பு பிரதிநிதித்துவம் என கூறி மக்களை வாக்களிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு சுமத்தப்பட்ட பாதுகாப்புச் சட்டத்தைப் போன்ற மறுசீரமைப்பு தேவை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இருப்பினும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலை விட வாக்குப்பதிவு மிகவும் குறைவாக இருந்ததாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய தேர்தலில் 58 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2000ஆம் ஆண்டு 43.6 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *