வவுனியா, 4ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்ததாக பூவரசன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இதனையடுத்து, வீட்டார் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முருத்தெட்டுவே தேரரை நிராகரித்த பல்கலை மாணவர்கள்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி