கிளிநொச்சியில் பஸ் ஒன்று பாரிய விபத்துக்குள்ளானது 17 பேருக்கு நேர்ந்த நிலை….?

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பதியத்தலாவை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்தானது இன்று (19-12-2021) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதிர்கமாத்தை நோக்கி கிளிநொச்சியில் இருந்து நேற்றிரவு (18-12-2021) குறித்த பஸ் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

Advertisement

இதன்போது இன்று அதிகாலை பதியத்தலாவை கல்லோடை பாலத்துக்கு அருகில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால், பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்தாகவும் கூறப்படுகின்றது.

இதனால் பஸ்ஸில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்த நிலையில் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *