சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற 12 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, ராகம மற்றும் அனுராதபுரத்தை சேர்ந்த 20 – 30 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸார், இவர்களை மோப்ப நாய்களின் உதவியுடன் கைது செய்தனர்.
குறித்த 12 பேரிடம் இருந்து, 10 மில்லி கிராம் ஹெரோயின், கேரளா கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டன.