அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் எரிவாயு வெடிப்பு சம்பவம்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரதான சமையல் அறையில் பயன்படுத்தப்படும் எரிவாயு ரைஸ் குக்கரில் ஒரு பகுதி வெடித்து தீப்பிடித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று மதியம் நடைபெற்றுள்ளது.

இந்த எரிவாயு ரைஸ் குக்கருக்கு மூன்று எரிவாயு கொள்கலன்களில் இருந்து எரிவாயு விநியோகிக்கப்படுவதுடன் ஒரு தடைவையில் 25 கிலோ கிராம் அரிசியை சமைக்க முடியும் என கூறப்படுகிறது.

இன்று மதியம் பாரிய சத்ததுடன் எரிவாயுவை செல்லும் பகுதி மற்றும் எரிவாயு வெளியேறும் இடத்தில் தீப்பிடித்துள்ளது.

இதனையடுத்து ஊழியர்கள் எரிவாயு விநியோகத்தை துண்டித்துள்ளனர். இதனால், மிகப் பெரிய ஆபத்து நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எரிவாயு ஒளவன் தீப்பிடித்தமை சம்பந்தமாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *