‘மனிதநேயத்தின் செயற்பாடு’ நூல் பிரதமருக்கு வழங்கி வைப்பு!

இளம் எழுத்தாளரான சளனி வாசலபண்டார எழுதிய ‘மனிதநேயத்தின் செயற்பாடு’ நூல் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள பிரதமர் இல்லத்தில் வைத்து குறித்த நூல் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கண்டி புனித நல்லாயன் கல்லூரியின் மாணவியாக இருந்தபோது ‘அன்புள்ள மாஸா’, ‘அழியாத நினைவு’ உள்ளிட்ட நான்கு நூல்களை எழுதியிருந்த நிலையில், ‘மனிதநேயத்தின் செயற்பாடு’ நூல் அவரது ஐந்தாவது நூலாகும்.

உயர்தரப் பரீட்சையில் சிறப்பாக தேர்ச்சி பெற்று தற்போது பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள அவர், முப்பது ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மனிதநேய நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த ‘மனிதநேயத்தின் செயற்பாடு’ என்ற நூலை எழுதியுள்ளார்.

மஹாசங்கத்தினர் மற்றும் பிரதமரின் பாரியார்ஸிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ச ஆகியோருக்கு இந்நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், நுவரெலியா உதவி கல்விப் பணிப்பாளர், நுவரெலியா பௌத்த மத்தியஸ்தானாதிபதி சாஸ்ரபதி கிரிஒருவே திரானந்த தேரர், உதவி கல்வி பணிப்பாளர் ராஜகீய பண்டித கலாநிதி புஸ்ஸல்லேவே ஷீலவிசுத்தி தேரர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படாது: அரசாங்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *