மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிரமதானம்!

மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன், மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) குறித்த சிரமதானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சாரணசங்க தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, மாவட்ட ஆணையாளரின் தலைமையிலும், Dr.சில்வாவின் வழிகாட்டலிலும் குறித்த சிரமதானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த சிரமதான பணியில் மன்னார் மாவட்ட சாரண சங்க அங்கத்தவர்கள் மற்றும் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை சாரணர்கள், மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை சாரணர்கள் மற்றும் மன்னார் மாவட்ட திரிசாரணர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *