மன்னாரிலும் 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் இன்று ஞாயிற்றுகிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவியவருகின்றது.

இரண்டு ரோலர் படகுகளில் வருகை தந்த 12 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்து, தாழ்வுபாடு கடற்படை முகாமில் தடுத்து வைத்த நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை இரவு 8 மணியளவில் மன்னார் நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணையின் பின்னர் குறித்த 12 மீனவர்களும் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

யாழில் உண்ணி காய்ச்சலால் மூதாட்டி உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *