வலி தெற்கு பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து அமரத்துவம் அடைந்த குமாரசுவாமியின் நினைவாக சுன்னாகத்தில் வீதி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அமரத்துவமடைந்த உறுப்பினரின் நினைவாக வலி தெற்கு பிரதேச சபையினால் புனரமைக்கப்பட்ட வீதிக்கு குமாரசுவாமி வீதி என பெயர் சூட்டப்பட்டு இன்று மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு பொதுமக்கள் பாவனைக்காக குமாரசுவாமி வீதியை திறந்து வைத்ததோடு பெயர் பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்தனர்.

