நடராஜப் பெருமானுக்குரிய மிக்க முக்கியமான விரதங்களில் ஒன்றான மார்கழி திருவெம்பாவை திருவிழாவான முத்தேர் இரதோற்சவம் இன்று காலை வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் சிவன் கோவிலின் ஸ்ரீகமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக இடம்பெற்றது.
ஸ்ரீகமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமிக்கான விசேட அபிசேகங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்றுள்ளன.
நடராஜப்பெருமானுக்காக ஆருத்ரா அபிசேக, ஆராதனை என்பனவும் இடம்பெற்று ஸ்ரீ கமலாம்பிகை, முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து முத்தேரேரி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இவ் பூஜை கிரியைகளை ஆலயபிரதம சிவஸ்ரீ சிறிதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்.
இங்கு பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு ஸ்ரீகமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி அருள்கடாட்சங்களை பெற்றுச்சென்றனர்.