யாழில் விகாரை அமைக்கப்பட்ட குமார கோயிலின் பிள்ளையார் சிலையை காணவில்லை – முறைப்பாடு பதிவு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை குமார கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை குமார கோயில் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காலப்பகுதியில் கோயில் வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டது.

பின்னர் கோயில் அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து , குமார கோயில் புனரமைக்கப்பட்டு, ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் கோயிலில் இருந்த விநாயகர் சிலை இருப்பிடத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு , காணாமலாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *