சவப்பெட்டி கொண்டு செல்வதாக கூறி அதற்குள் மறைத்துவைத்து கசிப்பு விற்ற சவபெட்டி தயாரிப்பாளர் ஒருவர் பாணந்துறையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் பல இடங்களுக்கு சவப்பெட்டிகளை விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறி அதற்குள் கசிப்பு போத்தல்களையும் கொண்டு சென்றுள்ளார்.
இதுதொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இவரது சவப்பெட்டி தயாரிப்பு நிலையத்தினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, 16,000 மில்லி கோடா, 5 கசிப்பு போத்தல்கள், எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிவாயு அடுப்பு அடங்கிய 8 பரல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சவப்பெட்டி தயாரிக்கும் பகுதியின் மையத்தில் ஒரு நிலத்தடி பதுங்கு குழியில் பீப்பாய்கள் மற்றும் பிற உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
விசாரணையின் போது, சந்தேக நபர், சவப்பெட்டிகளை கொண்டு செல்வதாக கூறி வடிகட்டப்பட்ட கசிப்பு போத்தல்களை, அதற்குள் பதுக்கி வைத்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.
32 வயதான குறித்த நபரை, பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை! அசேல குணவர்தன