கொவிட் தொற்றை எதிர்கொள்ள பிரித்தானியாவிடமிருந்து 220 மில்லியன் பவுண்டுகளை பெறும் ஸ்கொட்லாந்து!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை எதிர்கொள்ள பிரித்தானியா அரசாங்கத்திடம் இருந்து, ஸ்கொட்லாந்து மேலும் 220 மில்லியன் பவுண்டுகளைப் பெற உள்ளது.

ஒமிக்ரோன் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், திறைசேரியில் இருந்து அதிக பணம் பெற ஸ்கொட்லாந்து அரசாங்கம் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

பகிர்ந்தளிக்கப்பட்ட நாடுகளுக்கும் பிரித்தானியா அரசாங்கத்திற்கும் இடையிலான விவாதங்களைத் தொடர்ந்து கூடுதல் நிதியுதவி வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், இந்த அறிவிப்பை வரவேற்றார். ஆனால் இது எப்படியும் ஸ்கொட்லாந்திற்கு வந்திருக்கும் பெருந்தொகைக்கான முன்பணமாகத் தோன்றியதாகக் கூறினார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப் பகிர்ந்தளிக்கப்பட்ட நாடுகளுடனான கோப்ரா குழுவின் கூட்டத்தில் பிரதமரோ அல்லது திறைசேரியின் தலைவரோ கலந்து கொள்ளவில்லை என்பது நம்பமுடியாதது என்றும் அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *