புதிய 10,000 ரூபா நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் தயாரா?

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் புதிய 10,000 ரூபா நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், அவ்வாறான தகவல்கள் பொய்யானவை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, இம்மாத இறுதிக்குள் வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியன் டொலர்களை எட்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *