திருமலை – தம்பலகாமம் கடை விபத்து; சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தாய்

தம்பலகாமம் கடையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் காயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சை பெற்று வந்த தாய் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை 99ம் கட்டை சந்தியில் பெற்றோல் கடை ஒன்று கடந்த 09.12.2021 அன்று மதியம் தீ விபத்துக்கு உள்ளாகியது.

குறித்த கடை தீப்பற்றியதில், கடை உரிமையாளர் பலத்த எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (21) உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பெற்றோல் கடை உள் பகுதியில் சோளக் கதிரை தீமூற்றி அடுப்பில் வைத்திருந்த நிலையில், பெற்றோல் தீப்பிடித்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவந்தது.

இரு பிள்ளைகளின் தாயான 45 வயதுடைய எச்.எம்.சம்சுநிசா என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *