நுகர்வோர் சதோச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யும் அரிசி தொகையானது 10 கிலோ கிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீனியை கொள்வனவு செய்யாத நுகர்வோருக்கு மேலதிகமாக இரண்டு கிலோ கிராம் அரிசியை விற்பனை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் வருட இறுதி வரை இந்த சந்தர்ப்பம் கிடைக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.