கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
உயிரிழந்தவரின் சடலம் பூநகரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.