நாட்டில் அபிவிருத்தி என்பது பரந்துபட்டு இருக்கவேண்டுமே தவிர, ஒரு இனம் சார்ந்து இருக்கக் கூடாது என சமூக செயற்பாட்டாளர் இ.செல்வின் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில், இன்று இடம்பெற்ற சமகால அரசியல் உரை அரங்கு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் குடியேற்ற பரம்பல் என்பது வெறும் நிலத்தை அடிப்படையாக கொண்டு அமையக்கூடாது. ஏனென்றால் இங்கு பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.
ஆனாலும், நாட்டின் ஆட்சியாளர்களின் பொதுவான சிந்தனை என்னவென்றால், இலங்கையில் 72 வீதம் சிங்கள பெரும்பான்மை காணப்படுகிறது.
ஆகவே, இந்த பெரும்பான்மை நாடு முழுவதும் பரம்பலாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்றால் ஓவ்வொரு தேர்தல் தொகுதியிலும் தங்களின் பலம் இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் மலையகத்தை எடுத்துக்கொண்டால் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒரு பலம் நிரூபிக்கப்பட்டது. அது அன்றைய சிங்கள தலைவர்களுக்கும் ஒருபேர் இடியாக இருந்தது.
அதன் பின்னர் தான் அவர்களை இந்திய குடியேற்ற வாசிகள் என்று கூறி வாக்குறுதியை பறித்தார்கள். அதன் தொடர்ச்சி தான் நாம் இப்போது பார்கின்றோம்.
அடுத்த விடயம் அபிவிருத்தி. அபிவிருத்தி என்று பார்க்கும் போது இங்கு எது அபிவிருத்தி என்று நோக்க வேண்டும். ஜேர்மன் அபிவிருத்தி அடைந்து வரும்போது, அதன் கைத்தொழில் முயற்சிகளை முடக்க நினைத்தார்கள். அதற்கு பின்னர்தான் மார்சல் போட்ட திட்டம், நம்பிக்கை, முயற்சி ஜேர்மனியை கட்டியெழுப்பியது.
ஆகவே, முயற்ச்சி, திட்டம் இரண்டும் அபிவிருத்திக்கு முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மீன்பிடி, விவசாயம் இவை இரண்டுக்கும் சமனாக கைத்தொழில் இருக்க வேண்டும்.
ஆனால், 2009ஆம் ஆண்டுக்கு இங்கே எங்கு கைத்தொழில் உள்ளது. ஒரு ஆனையிறவு உப்பு கூட இப்போது உயிரை இழந்துள்ளது. காங்கேசந்துறையும் அவ்வாறு உள்ளது. ஆனால் இன்று அரசு அம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்கிறது.
இன்று நாட்டில் திறந்த பொருளாதாரம். எனினும், அரசாங்கம் முதலீடுகளை செய்வதில்லை. எல்லாமே தனியார் துறையாகவே உள்ளது.
ஆகவே, அரசு தொழில் துறையை முன்னேற்ற வேண்டும். அதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். நாட்டில் முடங்கிப் போய் உள்ள தொழில் சாலைகள் மீள கட்டியெழுப்பப்பட வேண்டும்.
விவசாயம் வேண்டும், அரச தொழில் வேண்டும் என்று நிற்கின்றோம். அதே போன்று நாம் கைத்தொழில்களை மேம்படுத்த வேண்டும். எங்களுக்கு கடல் உண வேண்டுமே தவிர, நாம் கடல் அட்டை ஒருபோதும் இங்கு சாப்பிடுவதில்லை.
ஆனால், கடல் அட்டை வேண்டாம் என்று சொல்லவில்லை, முதலில் மீன், அதன் பின்னர் அனைத்தும் எமக்கும் வேண்டும். ஆகவே அபிவிருத்தி எதை நோக்கி செல்ல வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு வங்குரோத்து நிலையை அடையும் அபாயத்தில் உள்ளது! சம்பிக்க எம்.பி