மாநிலங்களின் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் குறித்த அறிவிப்பு!

மாநிலங்களின் கையிருப்பில் 16.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 1,49,16,36,985 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 16,67,25,556 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 143.15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *