பிரச்சினையை தீர்க்க சர்வதேச நாணய நிதியதிடம் செல்ல தயார் – பசில்

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப் போவதில்லை என அமைச்சர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னரான ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் தமக்கு இரகசிய அறிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் உள்ளடக்கங்களை வெளியிட முடியாது எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண ஏனைய நாடுகளுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தோடு ஒவ்வொரு நாடுகளுடனும் கலந்துரையாடலை நடத்த தனித்தனியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *