எமக்குரிய இடத்தை எமக்கு தா! சங்கானை வியாபாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

சங்கானை மரக்கறிச் சந்தை வியாபாரிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – சங்கானை பொதுச் சந்தையில் வெற்றிலை மற்றும் பழங்கள் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் இன்று காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பால், தமது சந்தைக்கு வருகின்ற சிறு வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் வேறு மரக்கறி சந்தைக்கு சென்று குறைந்த விலையில் பொருட்களை பெற்றுக் கொள்வதன் காரணமாக தாம் மேலும் பல நெருக்கடிக்குள் உள்ளாவதாக சுட்டிக்காட்டினார்.

கொரோனா நிலைமை காரணமாக, முன்னர் வியாபாரத்தில் ஈடுபட்ட இடத்திலிருந்து, தற்காலிகமாக வியாபாரம் செய்வதற்காக பழைய மீன் சந்தை பகுதி எமக்கு ஒதுக்கப்பட்டது.

நாட்டில் தற்போது கொரோனா நிலைமை குறைந்த நிலையில், எம்மை நிரந்தரமாக மீன் சந்தை பகுதியிலேயே வியாபாரத்தில் ஈடுபடுமாறு கூறிவிட்டு, பொதுச் சந்தை கட்டட தொகுதியில், புதிய வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

25 வருடங்களாக வியாபாரம் செய்யும் நாம், துர்நாற்றம் வீசும் இடத்தில், சுகாதார பாதுகாப்பு இன்றி வியாபாரத்தில் ஈடுபடுகின்றோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியா சங்கானை பிரதேச சபை தலைவரிடம் வினவியபோது:

கொரோனா நிலையில் பல வியாபாரிகள் ஒரே இடத்தில் நெருக்கமாக வியாபாரம் செய்ய முடியாது என்ற காரணத்தால் அவர்கள் பழைய மீன் சந்தை கட்டடத்துக்கு மாற்றப்பட்டனர்.

M. O. H மற்றும் P. H. I இன் அறிக்கையின் படி சுகாதார நடைமுறைகள் தளர்த்தப்படவில்லை. கொரோனா நிலை சீரான பின்னர், சுகாதார துறையின் அறிவுத்தலின் படி அவர்கள் மீண்டும் பழைய இடத்துக்கு இடமாற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வியாபாரிகளை உரிய இடத்திற்கு மாற்றம் செய், புதிய வியாபாரிகளுக்கு இட ஒதுக்கீட்டை நிறுத்து, எமது இடத்தை எடுத்து புதிய வியாபாரிகளுக்கு கொடுக்க முன்வராதே , எமது வியாபாரத்தை முடக்கி எம் வாழ்வாதாரத்தத்தை சீரழிக்காதே போன்ற வசனங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இதேவேளை , தமது சந்தையின் வியாபார நடவடிக்கைள் பாதிக்காத வகையில் நல்லதொரு தீர்வினை உடனடியாக பெற்றுத் தருமாறு வலி. மேற்கு பிரதேச தவிசாளருக்கு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.

குறித்த அறிக்கையில்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *