மியன்மாரில் அவசரமாக கொள்வனவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருள்!

மியன்மாரிடமிருந்து ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வர்த்தக அமைச்சுக்கும் மியன்மார் அதிகாரிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த அரிசி தொகையை ‘பாதுகாப்பான தொகையைாக’ பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *