15 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது கொரோனாத் தடுப்பூசி வழங்க தீர்மானம்!

நாட்டில் 15 – 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது கொரோனாத் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

15 – 19 வயதுக்குட்பட்டவர்கள் முதலாம் கொரோனாத் தடுப்பூசி பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்ததையடுத்தே இவ்வாறு இரண்டாவது கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அத்துடன், அனைத்து ஆசிரியர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மன்னாரில் அரச உத்தியோகஸ்தர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *