விளையாடி கொண்டிருந்தபோது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்….!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார்.

இவருக்கு மணீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் மணீஷ் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான்.

இதனை அடுத்து சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி அலைந்துள்ளனர்.

அப்போது கிணற்றுக்கு அருகில் கிடந்த மணீஷின் காலணிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

அதன்பிறகு காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *