இலங்கை மீன்பிடி படகு மாலைதீவு கடற்பரப்பில் விபத்து – ஒருவர் மாயம்!

பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குப் புறப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவை படகு மாலைதீவு கடற்பரப்பில் விபத்திற்குள்ளாகியுள்ளதாக பேருவளை கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

எனினும், படகில் பயணித்த ஏனைய மீனவர்கள் படகின் மீது ஏறி நின்று உதவி கோரியுள்ளனர்.

இதனையடுத்து, எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பலினால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேருவளை கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதேவேளை, பேருவளை, வளத்தறை, அம்பேபிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுடன் பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்று கடலுக்கு பயணித்துள்ளதாகக் கரையோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *