நாட்டின் டொலர் நெறுக்கடியை தீர்க்க அமைச்சர் விமல் வீரவன்ச கூறும் யோசனை!

சர்வதேச சந்தையை வெல்லக்கூடிய கைத்தொழில்களை நாட்டில் நிறுவுவதன் மூலமே டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் அச்சிடப்படும் பணத்தை தொழில் துறைகளில் முதலீடு செய்வதன் ஊடாக மட்டுமே அதன் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது உள்ள டொலர் நெருக்கடிக்குத் தீர்வாக ஏனைய நாடுகளிடமிருந்து கடன் பெறுவதன் மூலம் நாட்டின் கடன் சுமை அதிகரித்துச் செல்லும்.

எனவே அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய தொழில் துறைகளை ஊக்குவிப்பதன் மூலமே நாட்டை இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீட்டெடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, விஞ்ஞான வேலைத்திட்டத்தின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *