ஓடிக் கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் இருந்து கைதி லாவகமாக தப்பியோட்டம்….!

பிரேசிலில் சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் இருந்து கைவிலங்கு பூட்டப்பட்ட கைதி லாவகமாக தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாகி பரவி வருகிறது.

பரைபா மாகாண சாலையில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்று கொண்டிருந்த வாகனத்தில் இருந்து போலீசார் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு கைதி தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தப்பிய கைதியை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *