கசிப்பு மற்றும் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது!

வவுணதீவு – தாண்டியடி புதுமண்ட பத்தடியிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் அரச மதுபானங்களை விற்பனையில் ஈடுபட்டு வந்த தாயையும் மகளையும் வவுணதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இத்துடன், கசிப்பு மற்றும் மதுபானப் போத்தல்களையும் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய நேற்று மாலை குறித்த பகுதியிக்கு அருகே உள்ள இரு வீடுகளை முற்றுகையிட்டனர்.

இதன் போது ஒரு வீட்டில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 5 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அருகிலுள்ள வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அரச மதுபானங்களைச் சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை 10 கால் போத்தல் மதுபானங்களுடன் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரும் தாயும் மகளும் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *